விளைவித்த விவசாயிக்கு ,
விலை வைக்கும் உரிமை கூட இல்லை ,
விளைந்த பயிரெல்லாம் ,
களத்துமேட்டிலே கால் விலைக்கு போயாச்சு !
மிச்சம் "அடுக்குப்பானையில்"
அடுத்த வருஷ விதைப்புக்கு "விதை " மட்டும் ,
நாங்கள் விதையாக இருந்து முளைக்கின்றோம் !
அறுவடைக்கு மட்டும் யாரோ !
உழைச்ச எனக்கு ,
சோழ சோறும் ,
முருங்கை கீரை கூட்டும் ,
பொட்டுகடலை துவையலும் .
ஆனால் அடுத்தவன்,
உழைப்பில் வாழும் சோம்பேறிக்கு,
பொன்னி அரிசி சாதமும்,
பொரியல் , கூட்டு ,
சாம்பார் ,ரசம் , தயிர்,
அப்பளம், வடை ,பாயாசம்.
என்ன கொடுமை சார்?
No comments:
Post a Comment