Friday, February 6, 2015

தோட்டத்து வேலியில் மறைவாக தானே உயிராகி காய்த்தும் பழுத்தும் போனது பாகற்காய் (பழம் ) ,,,
சற்றே வருத்தம் ...அட....டா...,
கொஞ்சம் முன்னாடியே தெரியாமல் போச்சே ,,,
இப்போது யாருக்கும் பயனில்லையே என்று யோசித்து பழத்தை பறித்து கரையில் போட்டுவிட்டேன்  ,,
அடுத்தநாள் அதே வழியே நடந்தேன் பார்த்தபோது பாகற்பழம் வெடித்து சிவப்பு நிறத்தில் முத்து முத்தாய் மின்னியது அதன் விதைகள் ,,,
அத்தனை விதைகளும் எத்தனை செடியாகும் ?
அத்தனை செடியும் எத்தனை காய் கொடுக்கும் ?
அத்தனை காய்களும் எத்தனை பேருக்கு
உணவாகும் ?
எதையோ உணர்த்துகிறது பாகற்காய் ,,,
வாழ்க்கையோடு !
இப்போது இவைகள் நடுவயலில்  வேலியின் பாதுகாப்புக்குள் பந்தல்கள் அமைத்து வளரப்போகிறது ,,,
புரிந்தது ,,
யாரும் கீழோரும் அல்ல ,,,
யாரும் மேலோரும் அல்ல ,,, என்று ,

வேலியில் இருந்த செடியின் வாரிசுகள் நிலத்தை ஆளப்போவது போல் நிலத்தை ஆண்ட பயிர் நாளை வேலிக்கும் போகலாம் ,,

அது பயிரை பொருத்து ,,,
அளவாக இருத்தல் எப்போதும் நிரந்தரம் !