கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதை விட, நம்மை சுற்றியுள்ள மனிதனிடம் அன்பு செலுத்துவதையே ஆண்டவனும் மனிதனிடம் வேண்டுகிறான் ................!
Thursday, February 20, 2014
Tuesday, October 16, 2012
ஒரு போகத்துக்கு ஏழு சாலு உழவு !
கோடை மழைக்கு ரெண்டுசாலு !
காணிக்கு இருபது வண்டி எருதள்ளி !
மடக்கு உழவு இரு சாலு !
"புல்லு மடக்க" இரு சாலு !
வெதப்புக்கு ஒரு சாலு ! ஆக,
காணிக்கு ஏழு சாலும் சேர்த்து ,
நடந்தது எழுபது மயிலு !
மறுநா மழைக்கு காத்திருக்கேன் !
வெதப்போட போயிடுமா ?
மானம்பாத்து காத்திருக்கேன் !
மழை வருமான்னு "மானத்தோட" !
கண்டுபிடிப்பு:-
படித்தவனெல்லாம் புத்திசாலி என்றால் !
வாருங்கள் !
உணவு உற்பத்தி செய்ய !
எத்துனை தொழில் வந்தாலும் ,
மூன்று வேலை சோறு வேண்டும்.!
இல்லன்னா கண்டுபிடிப்புகளெல்லாம் ,
கண்டுபிடிக்கவேண்டும் !
இனி வரும் காலத்தில்,
குழந்தைகளுக்கு விவசாயம் தெரியவேண்டும் !
முதல் முயற்சியுடன் என் குழந்தைகளுடன் !
பெருமைக்காக என்றாலும் , உண்மையே !
என் பிள்ளைகளை பெற்றதில் !
விடியட்டும் !
ஒரு வேலை சோற்றுக்கே !
பிச்சைஎடுக்க வைக்கும் இந்த சமுதாயமும் ,
ஒரு மானமுள்ளதுதானா ?
சாதி , மதம் , என்ற மதம்பிடித்து மதத்தினை திணிப்பவர்களே!
முதலில் மனிதனாக மாற முயற்ச்சி செய்யுங்கள் ! பாவம் !
ஏழை எளிய மக்களின் இயலாமையை சாதகமாக்கி,
அற்பத்தனமான ஆசைகளை காட்டி அவர்களின்,
உழைத்து வாழ்ந்த வாழ்க்கையையும் வீணாக்கி பிச்சை எடுக்க வைக்காதீர்கள் ..... வல்லரசாக வேண்டாம் !
முதலில் நல்ல அரசாக இருந்து ,
வருங்காலத்தின் முதுகெலும்பான இளைய சமுதாயத்தியாவது !
பிச்சை எடுக்கவைக்காமல் இருந்தால் போதும் !
நகர வாசிகளே !
நாளையும் எழுதுவீங்க !
கிராமத்தான பாத்து நாட்டான்னு ,
எங்க நிலைமையோ ,
விழி திறந்தாலே! கண்ணீர் வரும் ,
தண்ணீர் இல்லை என்பவர்கள் ,
"தன்"நீரை தருகின்றேன் ,
தாகம் தணியுங்கள்!
உழைத்தது எல்லாம் உங்களுக்கு ,
உழைப்பவனின் " உப்பும் "உங்களுக்கே !
உணர்வே இல்லியா ?
எங்களுக்கு ,
"மினரல் வாட்டர்" வேண்டாம் ,
எங்கள் தலைமீது "இடி"ந்து விழும் ,
"மின்னலின் வாட்டர்" போதும் !
வாழ்ந்தாள் தண்ணீர் குடித்து வாழ்கிறேன் !
இல்லையேல், இடி விழுந்து சாகிறேன் !
சுயநலமான சமதாயத்தில் இன்னும் ,
எவளவு நாள்தான் வாழ்வதோ !
Subscribe to:
Posts (Atom)






